×

ரேஷன் கடைகள் நாளை இயங்கும்

சென்னை: நாளை ரேசன் கடைகள் இயங்கும் என உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை வெளியிட்ட சுற்றறிக்கை: பொது விநியோகத் திட்டத்தின்  கீழ் ஜனவரி மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்களை குடும்ப அட்டைதாரர்கள் பெறுவதற்கு ஏதுவாக நாளை (30ம் தேதி) நியாயவிலை கடைகளுக்கு பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. இந்த பணி நாளுக்கு பதிலாக பிப்.26ம் தேதி (சனிக்கிழமை) நியாயவிலைக்கடைகளுக்கு விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.

Tags : Ration Store, Consumer Protection
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...