மக்கள் பார்வைக்காக பாம்பு பண்ணை திறப்பு

சென்னை: சென்னையில் உள்ள பாம்பு பண்ணை மக்கள் பார்வையிடும் வகையில் திறக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘சென்னை பாம்பு பண்ணை பார்வையாளர்களுக்காக 28.1.2022 (நேற்று) முதல் செயல்படும். பாம்பு பண்ணையின் அனைத்து ஊழியர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பண்ணைக்கு வருகை தரும் பார்வையாளர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: