துபாய்: சூதாட்ட தரகர்கள் தன்னை அணுகியது குறித்து உடனடியாக தகவல் தரத் தவறிய ஜிம்பாப்வே அணி முன்னாள் கேப்டன் பிரெண்டன் டெய்லருக்கு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மூன்றரை ஆண்டு தடை விதித்துள்ளது. கடந்த அக். 2019ல் தன்னை சந்தித்த இந்தியாவை சேர்ந்த ஒரு தொழிலதிபர் மற்றும் சூதாட்ட தரகரிடம் இருந்து ‘ஸ்பாட் பிக்சிங்’ செய்வதற்காக 15,000 டாலர் டெபாசிட் பெற்றதாகவும், சொல்வதை செய்தால் மேற்கொண்டு 20,000 டாலர் தருவதாக அவர்கள் கூறியதாகவும் பிரெண்டன் டெய்லர் (35 வயது) சமீபத்தில் தெரிவித்திருந்தார்.