திருமலை: ஆந்திராவில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 பேர் நிலத்தகராறில் வெட்டி கொலை செய்யப்பட்டனர். இது குறித்து எஸ்பி சுதீர்குமார் கூறியதாவது: கர்னூல் மாவட்டம், காமாவரம் கிராமத்தை சேர்ந்தவர் வட்டே மல்லிகார்ஜூனா. அதேபகுதியை சேர்ந்தவர் போயா முனேந்திரா. இவர்களுக்கு இடையே கடந்த 22 ஆண்டுகளாக நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. மல்லிகார்ஜூனா பாஜ.வையும், முனேந்திரா ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரசையும் சேர்ந்தவர்கள். இந்த விவகாரம் தொடர்பாக முனேந்திரா ஆளும் கட்சி தலைவர் மகேந்திராவை அணுகி ஆதரவை கோரினார்.