புதுடெல்லி: பிரதமர் மோடி , ‘பரிக்ஷா பே சர்ச்சா’ என்ற பெயரில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களுடன் கலந்துரையாடி வருகின்றார். தேர்வுகள், தேர்வினால் ஏற்படும் மன அழுத்தம் உள்ளிட்டவை குறித்து இந்த கலந்துரையாடலில் விவாதிக்கப்படும். கடந்த 2018ம் ஆண்டு முதல் இந்த கலந்துரையாடல் நடந்து வருகின்றது. இந்நிலையில், 5வது ஆண்டாக பிரதமர் மோடியின் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக பதிவு செய்வதற்காக கால அவகாசம் 2வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.