காரைக்குடி: உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பையடுத்து காரைக்குடியில் வாக்காளர்களை கவர அதிமுகவினர் பரிசு பொருட்கள் வழங்கும் பணியை துவக்கியுள்ளனர். இது தொடர்பாக விசாரித்து தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டு இருந்தது. திமுக அரசு அமைந்த பிறகு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. இதில் பெரும்பாலான இடங்களை திமுக கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.