சென்னை: சென்னை புறநகர் ரயில்களில் பயணச்சீட்டு வாங்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் பிப்ரவரி 1 முதல் நீக்கப்படுகிறது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்தது. தமிழ்நாடு அரசு விதித்த கட்டுப்பாடுகள் திரும்ப பெறப்பட்ட நிலையில் ரயில்வே விதித்த கட்டுப்பாடுகளும் நீக்கப்படுகிறது என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருந்தால் தான் பயணச்சீட்டு என்ற கட்டுப்பாட்டை ரயில்வே நிர்வாகம் நீக்கியது.