மதுரை: மாணவி தற்கொலை வழக்கை சிபிசிஐடி- க்கு மாற்ற கோரிய மனு மீதான தீர்ப்பை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்தது. மாணவி தற்கொலை வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி அவரது தந்தை முருகானந்தம் ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.