கேரட்டுக்கு கூடுதல் விலை-கோத்தகிரி விவசாயிகள் மகிழ்ச்சி

கோத்தகிரி : கோத்தகிரி பகுதிகளில் கேரட்டுக்கு கூடுதல் விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை விவசாயத்திற்கு அடுத்தபடியாக மலைக்காய்கறிகள் விவசாயம் நடைபெறுகிறது. மலைக்காய்கறிகளான கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட் டைக்கோஸ், காலி பிளவர், நூல்கோல், மேரக்காய், பீன்ஸ், பட்டாணி உள்ளிட்ட மலைகாய்கறிகள் மற்றும் சுகுனி, ஐஸ்பெர்க், சல்லாரை, புரூக்கோலி போன்ற வெளிநாட்டு காய்கறிகளும் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.

கோத்தகிரி பகுதியில் கடந்த சில வாரங்களாக போதுமான காலநிலை நிலவி வருகிறது.இதனால் கேரட் தோட்டங்கள் பசுமையாக காட்சி அளிக்கின்றன. மேலும் அவை நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாராகி வருகின்றன.கேரட்டுக்கு போதுமான கொள்முதல் விலை கிடைத்து வருகிறது. எனவே  கோத்தகிரி மற்றும் நெடுகுளா, காவிலோரை, பட்டக்கொரை, பில்லிகம்பை, கட்டபெட்டு, கதவுதொரை உள்ளிட்ட கிராம விவசாயிகள் தங்களது தோட்டங்களில் ஏராளமான பரப்பளவில் கேரட் பயிரிட்டுள்ளனர். தற்போது கோத்தகிரி காய்கறி மண்டிகளில் கேரட் ஒரு கிலோ ரூ.45 முதல் ரூ.70 ரூபாய் வரை தரத்திற்கு ஏற்ப கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதனால் கேரட் பயிரிடப்பட்டுள்ள  விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: