விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பிரதோஷம், தை அமாவாசையை ஒட்டி 4 நாட்கள் தரிசனத்திற்காக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 29 முதல் பிப்ரவரி 1ம் தேதி வரை சதுரகிரி மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா விதிகளை பின்பற்றி பக்தர்கள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்யலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.