கமுதி : கமுதி அருகே கோவிலாங்குளம்பட்டி பகுதியில் அதிக மழையால், தண்ணீர் தேங்கி சோளப் பயிர்கள் வீணாகின. கமுதி அருகே கோவிலாங்குளம்பட்டி, ஆரைகுடி, கோவிலாங்குளம், கொம்பூதி, நெருஞ்சுப்பட்டி, வில்லனேந்தல், சாத்தூர்நாயக்கன்பட்டி, எருமைகுளம், பறையங்குளம், காத்தனேந்தல் உள்ளிட்ட பகுதியில் உள்ள ஏராளமான கிராமங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் சோளப் பயிர்கள் பயிரிடப்பட்டன. இந்நிலையில் தற்போது பெய்த பருவமழையில் அதிகமான மழை காரணமாக சோளப்பயிர்கள் உள்ள இடத்தில் மழைநீர் தேங்கி பயிர்கள் வளராமல் முற்றிலும் வீணாகியது. இதனால் இப்பகுதி விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர்.