சென்னை: நடிகர் விஜய் சொகுசு கார் வழக்கில் அபராதம் வசூலிக்க உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. விஜய் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை முடியும் வரை வரை அபராதம் தொடர்பாக வணிக வரித்துறை எந்த கட்டாய நடவடிக்கையும் எடுக்ககூடாது என கூறியுள்ளது. நடிகர் விஜய் இறக்குமதி செய்த சொகுசு காருக்கு அதிகப்படடியான அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்துவதற்கு தாமதம் செய்ததற்காக 400% அளவிற்கு வணிக வரித்துறை அபராதம் விதித்ததை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.