சென்னை: திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கூலி தொழிலாளியின் மகனான பிரகாஷ் ராஜ், மாநில தரவரிசையில் 2ம் இடம் பிடித்து, சென்னை மருத்துவக் கல்லூரியை தேர்வு செய்துள்ளார். அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டால் எனது மருத்துவக் கனவு சாத்தியமாகியுள்ளது என்று பிரகாஷ்ராஜின் தந்தை தெரிவித்துள்ளார். இடஒதுக்கீட்டின் மூலம் கூலித் தொழிலாளியின் மகன் மருத்துவராகிறார்.