முழு ஊரடங்கு ரத்து எதிரொலி.. சென்னையில் மெட்ரோ ரயில் சேவைகள் வார நாட்களில் வழக்கம்போல் இயங்கும் என அறிவிப்பு!!

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் வார நாட்களில் வழக்கம்போல் இயங்கும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.இது குறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழக அரசு முழு ஊரடங்கு ரத்து செய்ததை தொடர்ந்து சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் இன்று முதல் வழக்கம்போல இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.  இன்று முதல் மெட்ரோ ரயில் சேவைகள் வார நாட்களில் அதாவது திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 5.30  மணி முதல் 11 மணி வரை இயக்கப்படும்.  மெட்ரோ ரயில் சேவைகள் வழக்கம்போல் நெரிசல் மிகுந்த நேரங்களில் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும் , மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் ஐந்து நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.  மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

மெட்ரோ ரயில் சேவைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கம் போல காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை பத்து நிமிட இடைவெளியில் இயக்கப்படும் . மெட்ரோ ரயில் சேவைகள் அரசு பொது விடுமுறை நாட்களில் காலை 5.30  மணி முதல் இரவு 10 மணி வரை 10  நிமிட இலைகளிலும்,  இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காகவும் , அனைத்து பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்கு,  மெட்ரோ ரயில் நிலையங்களில் நுழைவதற்கு,  மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் அனைத்து பயணிகளும் கட்டாயம் சரியாக முக கவசம் அணிந்து இருப்பதுடன்,  தனிமனித இடைவெளியை கடைபிடித்து, பயணம் செய்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு மெட்ரோ ரயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: