சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ராஜகண்ணப்பன், அன்பில் மகேஷ் மற்றும் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அண்ணா அறிவாலயம் வருகிறார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, செல்வப்பெருந்தகை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.