பாட்னா : பீகாரில் போலி மதுபானத்திற்கு ஒரே மாதத்தில் 37 பேர் பலியாகி இருப்பது அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. மதுவிலக்கு தடை அமலில் உள்ள பீகார் மாநிலத்தில் போலி மதுபானம் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக உயிரிழப்புகளும் அங்கு அதிகரித்து உள்ளன. இந்த மாதத்தில் மட்டும் 3வது முறையாக போலி மதுபானத்திற்கு சிலர் உயிரை துறந்துள்ளனர். பக்ஸர் மாவட்டத்தில் உள்ள முரார் என்ற இடத்தில் நேற்று முன் தினம் போலி மதுபானத்தை குடித்த 9 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்துள்ளனர்.