சென்னை : வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல விதிக்கப்பட்ட தடை தற்போது விலக்கி கொள்ளப்பட்டுள்ளதால், இன்று கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. நீண்ட நாட்கள் கழித்து வெள்ளிக்கிழமையான இன்று கோயில்கள் திறக்கப்பட்டுள்ளதால் ஏராளமான பக்தர்கள் வடபழனி முருகன் கோயிலில் காலை முதலே தரிசனம் செய்ய குவிந்துள்ளனர்.