வீரராகவப் பெருமாள் திருக்கோயிலில் தை மாத பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது

திருவள்ளூர்: 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவள்ளூா் ஸ்ரீவைத்திய வீரராகவப் பெருமாள் திருக்கோயிலில் தை மாத பிரமோற்சவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவள்ளூர் வைத்திய ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோயிலில் தை மாத பிரமோற்சவ விழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அதில், வெவ்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி புறப்பாடு நடைபெறும். ஆனால் இந்தாண்டு கொரோனா தொற்று காரணமாக சுவாமி திருவீதி புறப்பாடு ரத்து செய்யப்பட்டு கோயிலில் உள் புறப்பாடு நடத்தி, செல்வர் மண்டபத்தில் எழுந்தருள்வார் என கோயில் நிர்வாகம் தெரிவித்தது.

இதைதொடர்ந்து, நேற்று காலை 5.50 மணிக்கு தை பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து காலை 7 மணிக்கு தங்க சப்பரம் அலங்காரத்தில் உற்சவர் வைத்திய ஸ்ரீ வீரராகவ பெருமாள் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி சமேதரராக கோயில் உள் புறப்பாடு வந்து செல்வர் மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து இன்று காலை உற்சவா் ஹம்ச வாகனத்திலும், இரவு சூரியபிரபை வாகனத்த்திலும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாா். நாளான நாளை காலை கருட சேவையும், கோபுர தரிசனமும் நடைபெறுகிறது.

5வது நாள் 31ம் தேதி அம்மாவாசையை முன்னிட்டு ரத்னாங்கி சேவையில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். பிரம்மோற்சவத்தின் 7ம் நாளான  பிப்ரவரி 2ம் தேதி காலை திருதோ் திருவிழா, 4ம் தேதி தீர்த்தவாரியும், 5ம் தேதி வெட்டிவோ் சப்பரம் அலங்காரத்திலும், இரவு 8 மணிக்கு பெருமாள் காட்சியளிக்கவும் உள்ளாா். ஆண்டுதோறும் திருவள்ளூா் ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோயிலில் தை மாத பிரமோற்சவ விழா வெகு விமர்சியாக நடைபெறும். திருவிழாவில் திருவீதி உலா இந்த ஆண்டு இல்லாதது பக்தர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: