திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா 3வது அலை அதி பயங்கரமாக வீசிக் கொண்டிருக்கிறது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தினசரி நோயாளிகள் எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நேற்றும் நோயாளிகள் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியது. சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் நேற்று கூறியது: கேரளாவில் கொரோனா 3வது அலையின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. நோய் பாதிக்கப்படுபவர்களில் 94 சதவீதம் பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் பரவியுள்ளதுஎன்றார்.