பண்ருட்டி: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கீழக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்நாதன் (40), கார் டிரைவர். இவரது மனைவி தனலட்சுமி. மகள் அபிநயா (6), மகன் அஷ்வின் (4 ). நேற்று மாலை தெருவில் விளையாடிக்கொண்டிருந்த அஷ்வினை காணவில்லை. இதனால் அதிரச்சி அடைந்த பெற்றோர் அப்பகுதியில் தீவிரமாக தேடிவந்தனர். இரவு முழுவதும்தேடியும் மகன் கிடைக்கவில்லை. இதுகுறித்து நேற்றிரவு முத்தாண்டிக்குப்பம் காவல்நிலையத்தில் செந்தில்நாதன் புகார் கொடுத்தார். போலீசார் பல இடங்களில் தேடிப்பார்த்தும் எவ்வித தகவலும் கிடைக்கவிலலை.இந்நிலையில் இன்று காலை அதே கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணி என்பவருக்கு சொந்தமான முந்திரிதோப்பில் ஒரு மரத்தின் அடியில் தலையில் பலத்த காயத்துடன் அஷ்வின் இறந்து கிடந்தான்.