பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு உரித்தான நிதியினை விரைந்து வழங்கிடவும்; அமைச்சர் பெரியகருப்பன் கோரிக்கை

சென்னை: மாண்புமிகு ஒன்றிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் தலைமையில் பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டம் மற்றும் பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம் ஆகிய திட்டங்களுக்கான காணொலி வாயிலாக கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் திரு.கேஆர். பெரியகருப்பன் அவர்கள், முதன்மை செயலர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை (கூடுதல் பொறுப்பு), இயக்குநர், ஊரக வளர்ச்சி மற்றும் மற்றும் ஊராட்சி துறை  மற்றும் இதர உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டின் சார்பாக, மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.கேஆர். பெரியகருப்பன் அவர்கள் கீழ்கண்டவாறு எடுத்துரைத்தார்.

தமிழ்நாட்டில், பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டம் I மற்றும் II-ன் கீழ் அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன. மேலும், பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டம் III-ன் கீழ் எடுக்கப்பட்ட அனைத்து பணிகளும் முன்னேற்றத்தில் உள்ளன. மாண்புமிகு அமைச்சர் அவர்கள், நடப்பாண்டிற்கான சாலைகள் மற்றும் பாலங்களுக்கான பிரேரணைகளுக்கு ஒப்புதல் வழங்குமாறு ஒன்றிய அரசினை கேட்டுக்கொண்டார். மேலும், மாண்புமிகு அமைச்சர் அவர்கள், பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம் (ஊரகம்)-ன் கீழ் வீடுகள் கட்டும் பணிகள் விரைவுபடுத்தப்படும் என்று உறுதியளித்தார் மற்றும் இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு உரித்தான நிதியினை விரைந்து வழங்கிடவும் ஒன்றிய அரசினை கேட்டுக்கொண்டார்.

Related Stories: