சென்னை: தமிழ்நாட்டில் நியாய விலைக்கடைகள் மூலம் சிறு தானியங்களை விற்பனை செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. கம்பு, திணை, குதிரைவாலி, சாமை, வரகு அரிசி உள்ளிட் சிறு தானிய வகைகளை கொள்முதல் செய்து ரேசன் கடைகளில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் நியாய விலைக்கடைகளில் சிறுதானியங்கள் விற்பனை செய்ய உத்தரவிட்டு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ராகி, கம்பு, திணை, குதிரைவாளி, சாமை, வரகு உள்ளிட்ட சிறு தானியங்களை நியாய விலைக்கடைகள் மூலம் விற்பனை செய்ய முடிவு எடுத்து தமிழக அரசு அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது.