சென்னை: சென்னையில் குடியரசு தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதற்கு ரிசர்வ் வங்கி வருத்தம் தெரிவித்துள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்நாட்டின் மாநில பாடல் என்பதை உணர்கிறோம் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் வழக்கங்களையும், நடைமுறைகளையும், மதிப்பதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.