பொங்கல் பரிசு தொகுப்பு தரம் குறைப்பாடு; தரக்கட்டுப்பாட்டு மேலாளர் பணியிடை நீக்கம்.! தமிழக அரசு நடவடிக்கை

சென்னை: தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் முதுநிலை தரக்கட்டுப்பாட்டு மேலாளர் பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பொங்கல் பரிசு பொருட்கள் வழங்குவதில் சில இடங்களில் தரம் குறித்த புகார்கள் வந்ததால் விசாரணை நடைபெற்றது.

கொள்முதல் செய்த பொருட்களின் தரத்தை உறுதிப்படுத்துவதில் மெத்தனமாக செய்ல்பட்டதால் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொங்கல் தொகுப்பில் தரமற்ற பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் முதுநிலை தரக் கட்டுப்பாட்டு மேலாளரை பணியிடைநீக்கம் செய்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் நியாயவிலை கடைகளில் வழங்கப்பட்ட பொங்கல் சிறப்பு தொகுப்பில், சில இடங்களில் கொள்முதல் செய்யப்பட்ட பொருட்களின் தரத்தை உறுதி செய்வதில் மெத்தனமாக செயல்பட்ட  குடிமைப்பொருள் வழங்கல் முதுநிலை தரக் கட்டுப்பாட்டு மேலாளர் பணியிடை நீக்கம் செய்யப்ட்டுள்ளார். பொங்கல் பரிசுத் தொகுப்பு தரம் குறைபாடு விவகாரத்தில் விரிவான விசாரணை மேற்கொண்டு தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

Related Stories: