டெல்லி: டெல்லியில் 20 வயது இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து மொட்டையடித்து செருப்பு மாலை அணிவித்து முகத்தில் கருப்பு கொடியை பூசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கஸ்தூரிபாய் நகரை சேர்ந்த இளம்பெண்ணை சட்டவிரோத மது விற்பனையாளர்கள் சிலர் பாலியல் வன்கொடுமை செய்ததுடன் மொட்டையடித்து செருப்பு மாலை அணிவித்து கொடூரத்தை அரங்கேற்றியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த மகளிர் ஆணையம் காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.அதில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் கைது செய்வதுடன் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தாருக்கு பாதுகாப்பு அளிக்கும்படி கூறப்பட்டுள்ளது.