பெங்களூரு: 15வது சீசன் ஐபிஎல் தொடர் மார்ச் இறுதியில் தொடங்கி மே மாதம் வரை நடைபெற உள்ளது. இதற்காக வீரர்கள் பொது ஏலம் பிப்.12, 13ம் தேதிகளில் பெங்களூருவில் நடைபெறும் என தகவல் வெளியானது. ஏலத்திற்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில், ஏலத்திற்கான இடத்தை பிசிசிஐ இன்னும் இறுதி செய்யவில்லை. பெங்களூருவில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. தினமும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் ஐபிஎல் ஏலத்தை பெங்களூருக்கு வெளியே மாற்றலாமா அல்லது இன்னும் சிறிது காலம் காத்திருக்கலாமா என்பது குறித்து வாரியம் இன்னும் குழப்பத்தில் உள்ளது