சென்னை: தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் முதுநிலை தரக்கட்டுப்பாட்டு மேலாளர் பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பொங்கல் பரிசு பொருட்கள் வழங்குவதில் சில இடங்களில் தரம் குறித்த புகார்கள் வந்ததால் விசாரணை நடைபெற்றது. கொள்முதல் செய்த பொருட்களின் தரத்தை உறுதிப்படுத்துவதில் மெத்தனமாக செய்ல்பட்டதால் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.