பிஜ்னூர்: உத்தரபிரதேச சட்டப் பேரவையில் எதிர்கட்சித் தலைவராக யோகியை பார்க்க விரும்புகிறேன் என்று விவசாய சங்கத்தலைவர் ராகேஷ் திகைத் கூறினார். கடந்த ஓராண்டாக நடந்த விவசாயிகள் போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்திய இந்திய தேசிய கிசான் யூனியன் தேசிய செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திகைத், ஆளும் பாஜக அரசுக்கு எதிராக பல தருணங்களில் கண்டனங்களை தெரிவித்து வந்தார். இந்நிலையில் அவர் உத்தர பிரதேச மாநிலம் பிஜ்னூர் கிராம விவசாயிகளிடம் பேசுகையில், ‘ஜனநாயகத்தில் ஒவ்வொருவரும் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க சுதந்திரம் உண்டு. அமைதியான சூழலில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு நபரும் அவரவர் விருப்பப்படி வாக்களிக்க அனுமதிக்கப்பட வேண்டும்.