தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு பரவலாக மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு பரவலாக மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களுக்கு மேலே நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, குமரியில் ஓரிரு இடங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Related Stories: