குன்னூர்: குன்னூர் அருகே உள்ள ரேலியா அணைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை உள்ள நிலையில் அத்துமீறி சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் நகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக ரேலியா அணை உள்ளது. அடர்ந்த வனப்பகுதிக்குள் அமைந்துள்ள இந்த அணைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அணையில் காவலாளி அமைத்து கண்காணிப்பட்டும் வருகிறது. இருப்பினும் அதனையும் மீறி சுற்றுலா பயணிகள் அங்கு சென்று வருகின்றனர். இளைஞர்கள் அங்கு சென்று மது அருந்திவிட்டு பாட்டில்களை வனப்பகுதிக்குள் வீசுவதால் வனங்கள் மாசடைந்தும் வருகின்றன.