முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக செயல்பட்டு வருவதால் சென்னையில் திமுக கூட்டணி 200 வார்டுகளை கைப்பற்றும்: தயாநிதிமாறன் உறுதி

சென்னை: சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளிலும் திமுக கூட்டணி நிச்சயம் வெற்றிபெறும் என்று மக்களவை உறுப்பினர் தயாநிதிமாறன் தெரிவித்துள்ளார். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின், செய்தியாளர்களிடம் பேசிய மத்திய தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக செயல்பட்டு வருவதால் அவர் மீது பொதுமக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பதாக தெரிவித்தார்.

இதன் காரணமாக சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளிலும் திமுக கூட்டணி நிச்சயம் வெற்றிபெறும் என்று தயாநிதிமாறன் உறுதிபட கூறினார். முன்னதாக சென்னை துறைமுகம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 900 குடும்பங்களுக்கு பொங்கல் பொருட்கள் மற்றும் வேட்டி,சேலை போன்ற பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுடன் இணைந்து தயாநிதிமாறன் பொங்கல் பொருட்கள் மற்றும் வேட்டி,சேலைகளை வழங்கினார்.     

Related Stories: