போபால்: தேசிய கொடியை அவமதித்த விவகாரம் தொடர்பாக அமேசான் நிறுவனம் மீது மத்திய பிரதேச போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். தேசியக் கொடிக்கு தனி மரியாதை கொடுக்கப்பட வேண்டும் என்பதோடு தேசிய கொடியை எங்கு பயன்படுத்த வேண்டும்; எப்படி பயன்படுத்துவது என்பது தொடர்பான விதிமுறைகள் உள்ளன. இந்நிலையில், மின்னணு வர்த்தக நிறுவனமான அமேசான் - இந்தியா நிறுவனம், தேசிய கொடி அச்சிடப்பட்ட ‘கீ செயின்’, சாக்லெட், கோப்பைகள், ஆடைகள், காலணிகள் ஆகியவற்றின் படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. குடியரசு தினத்தை முன்னிட்டு அமேசானில் மூவர்ண அச்சுடன் கூடிய பல பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இதுபோன்ற வர்த்தக முறையானது தேசிய கொடி அவமதிக்கும் செயல் என சமூக வலைதளங்களில் பலரும் கடும் கண்டனங்கள் தெரிவித்தனர்.