லக்னோ: உத்தரபிரதேசத்தில் டிக்டாக் பிரபலம் அர்ச்சனா கவுதம், ஹஸ்தினாபூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார். உத்தரபிரதேச மாநிலம் ஹஸ்தினாபூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக அர்ச்சனா கவுதம் அறிவிக்கப்பட்டுள்ளார். மீரட் பகுதியை சேர்ந்த இவர் மும்பைக்கு சென்று டிக்டாக், ஊடகம், சினிமா, மாடலிங் போன்ற துறைகளில் பணியாற்றி உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘மீரட்டில் பிறந்த நான், கங்கா நகரின் ஐஐஎம்டி கல்லூரியில் தகவல் தொடர்பியல் படிப்பை முடித்தேன். சினிமா தொழிலில் ஆர்வம் கொண்ட நான், மாடலிங் தொழிலைத் தொடர மும்பை சென்றேன். அதற்கு முன்னதாக டிக்டாக் மூலம் பொதுமக்களுக்கு அறிமுகமானேன். கடந்த 2015ம் ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமானேன்.