கோரக்பூர்: உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை எதிர்த்து போட்டியிட தயார் என மருத்துவர் கபீல் கான் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள மருத்துவக்கல்லூரியில் கடந்த 2017ம் ஆண்டு 80 குழந்தைகள் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழந்தனர். ஆக்சிஜன் விநியோகிக்கும் நிறுவனத்திற்கான தொகையை மாநில அரசு தராததால்தான் இந்த அவலம் நேர்ந்ததாக அப்போது பணியில் இருந்த மருத்துவர் கபீல்கான் கூறினார். இவரது பேட்டி, தேசிய அளவில் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், மருத்துவப் பணியில் அலட்சியமாக இருந்ததாக கூறி மருத்துவர் கபீல் கானை உத்தரப்பிரதேச அரசு பணியிடை நீக்கம் செய்ததுடன், அவரை கைதும் செய்தது.