லாகூர்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரஷீத் லத்தீப் அளித்துள்ள பேட்டி: ஐபிஎல்லில், இந்தியாவுக்கு வலுவான அடித்தளம் உள்ளது. இந்திய கிரிக்கெட் இப்போது நிதி ரீதியாக மிகவும் வலுவாக உள்ளது. எனவே இந்த சமீபத்திய மாற்றங்கள் அல்லது தோல்விகள் இந்திய கிரிக்கெட்டில் பாதுகாப்பு மற்றும் அதன் பிராண்டை மோசமாக பாதிக்காது. டெஸ்டில் கேப்டனாக ரோகித்சர்மா எவ்வளவு உந்துதலாக இருப்பார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.