கும்பகோணம்,ஜன.26: கும்பகோணம் அருகே கபிஸ்தலம் பகுதி சாலையில் உள்ள மின் கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கும்பகோணம் அருகே பாபநாசம் ஒன்றியம் கபிஸ்தலம் அருகே உள்ள உமையாள்புரம் கிராமத்தில் பெருமாள் கோவில் தெருவில் உள்ள மின் கம்பம் சாலையின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது .இந்த மின் கம்பம் இங்கு அமைக்கப்பட்டு இருப்பதால் இந்த சாலை வழியாக கனரக வாகனங்கள் மற்றும் லாரி போன்ற வாகனங்கள் வந்து செல்வதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.