பழநி: திண்டுக்கல்- பழநி- பொள்ளாச்சி அகல ரயில்பாதை வழித்தடத்தில் ஏராளமான ரயில்வே சுரங்க பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து வசதிக்காக அமைக்கப்பட்ட இப்பாதையில் மழைக்காலங்களில் தண்ணீர் குளம்போல் தேங்கி விடுகிறது. இதனால் இப்பாதையை பயன்படுத்தும் கிராமமக்கள் தண்ணீரில் நீந்தி தங்களது ஊர்களுக்கு செல்ல வேண்டி உள்ளது. இதன்படி பழநி அருகே தெ.லட்சலப்பட்டி செல்லும் சாலையில் நாகூர் பிரிவு அருகே உள்ள ரயில்வே சுரங்க பாதையில் கடந்த 1 மாதத்திற்கு மேலாக தண்ணீர் குளம்போல் தேங்கி உள்ளதாக தெரிகிறது.