கொள்ளிடம்: கொள்ளிடம் பகுதியில் பத்தாண்டுகளுக்குப் பிறகு சாலை வசதி ஏற்படுத்தி கொடுத்ததால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள தைக்கால் ஜின்னா தெருவிற்கான சாலை மிகவும் மோசமாகவும், குண்டும் குழியுமாகவும் இருந்துவந்தது. இதுகுறித்து கிராம மக்கள் சார்பில் கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதேபோல் கொள்ளிடம் அருகே உள்ள அனுமந்தபுரம் அம்பேத்கர்தெரு சாலை கடந்த பத்தாண்டுகளாக மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.