ஈத்தாமொழி: குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலத்தை ேசர்ந்தவர் விஜய் (24). முட்டம் தனியார் மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை வாகனங்களில் ஏற்றும் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் விஜய்க்கு ஆன்லைன் சூதாட்ட பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் அவர் ₹10 லட்சம் வரை இழந்துள்ளார். பெற்றோர் அறிவுரை கூறியும் சூதாட்டத்தை கைவிடவில்லை. இதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அனந்தநாடார்க்குடி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து விஜய் வசித்து வந்தார்.