நாகர்கோவில்: தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்கத்தில் நேற்று நடந்தது. நாகர்கோவில் வழக்கறிஞர் சங்க தலைவர் மரிய ஸ்டீபன் தலைமை வகித்தார். கூட்டத்தில் வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு மாநில தலைவர் நந்தகுமார் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வழக்கறிஞர்கள் சங்க பொறுப்பாளர்கள் பேசினர். இதில் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.