உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது செம்பியன்மாதேவி கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளி குமார் என்பவர் இன்று அதிகாலை 100க்கும் மேற்பட்ட ஆடுகளை கள்ளக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையை கடப்பதற்காக ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக உளுந்தூர்பேட்டையில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி சென்ற கன்டெய்னர் லாரி ஆடுகள் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே 15 ஆடுகள் உயிரிழந்தது.