இந்தி மொழியை எதிர்க்கவில்லை, இந்தி திணிப்பைத் தான் எதிர்க்கிறோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: இந்தி மொழியை எதிர்க்கவில்லை, இந்தி திணிப்பைத் தான் எதிர்க்கிறோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தி திணிப்பு போராட்டத்தை பெரியாரும், அண்ணாவும் முன்னெடுத்தனர். கோவை, சென்னை உள்ளிட்ட ஊர்களில் கைதானவர்கள் 6 மாதம் வரை சிறை தண்டனை பெற்றனர். 1938ம் ஆண்டு தமிழ்நாட்டில் நடந்த மொழிப்போராட்டத்தின் வெப்பம்தான் 2022ம் ஆண்டு வரை தணியாமல் உள்ளது; அன்றைய நாள் தந்தை பெரியார் மூட்டிய நெருப்பு ஒட்டுமொத்த தமிழர்களையும் ஒன்று சேர்த்தது. இருப்பது ஒரு உயிர், அது மொழிக்காக போகட்டுமே என்று சிறைக்கொடுமையால் முதலில் உயிர் துறந்தார் நடராஜன்; அதன் பின்பு உயிர் துறந்தார் தாளமுத்து. மாணவர்கள் போராட்டத்தை மதித்து தமிழ்நாட்டில் இந்திக்கு இடமில்லை என்று 1967ல் தீர்மானம் கொண்டு வந்தார் பேரறிஞர் அண்ணா. தமிழ், தமிழ் என்று பேசுவது குறுகிய மனப்பான்மை அல்ல; இந்தி உள்பட எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. அதனை பிறர் மீது திணிக்கும் ஆதிக்கத்தையே எதிர்க்கிறோம். மொழிப்போர் தியாகிகளின் தியாகத்தால் தமிழ்நாடு மேன்மை அடைந்துள்ளது; தமிழுக்காக உயிர் நீத்த தியாகிகள் பலருக்கு மணிமண்டபங்கள் அமைத்தவர் கலைஞர். மொழிப்போர் தியாகிகளுக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

Related Stories: