முசிறி: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தாலுகா அழகியமணவாளம் அருகே அழிஞ்சகரை கிராமத்தை சேர்ந்தவர் மருதை. இவரது மனைவி லட்சுமி, மகன் சூர்யா (16). கடந்த 3 வாரங்களுக்கு முன் மருதை இறந்து விட்டார். இதனால் லட்சுமி, தனது மகன் சூர்யாவுடன் தனியாக வசித்து வருகிறார். 10ம் வகுப்பு வரை படித்த சூர்யா, தற்போது பொக்லைன் ஆபரேட்டர் பயிற்சி பெற்று வருகிறார். இந்நிலையில் இந்த கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோயிலில் கடந்த வருடம் கும்பாபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு வருடாந்திர பூஜை நேற்று நடந்தது.