பெரம்பூர்: சென்னை பெரவள்ளூர் பகுதியை சேர்ந்த வாணி (32, பெயர் மாற்றப்பட்டுள்ளது) நேற்று பெரவள்ளூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது: குறிப்பிட்ட ஒரு செல்போன் நம்பரில் இருந்து என்னுடைய செல்போனுக்கு அருவருக்கத்தக்க வகையில் மெசேஜ், செக்ஸ் புகைப்படங்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. அதை நான் அழித்துவிட்டாலும் மீண்டும் மீண்டும் அனுப்பி வைக்கின்றனர். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு எனது எதிர்வீட்டில் வசிக்கும் பெண் ஒருவர் என்னுடைய செல்போனை வாங்கி பேசினார்.