சண்டிகர்: பஞ்சாப்பில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களிடம் கருத்து கேட்ட பின்னரே பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல் வரும் பிப்ரவரி 20ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இந்நிலையில் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் நிருபர்களிடம் கூறுகையில், ‘பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் எங்கள் கட்சி வெற்றிப் பெற்று ஆட்சிக்கு வந்தால், மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்னதாக பொதுமக்கள், வணிகர்கள், தொழிலதிபர்கள், விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் ஊழியர்களிடம் கருத்துக்கள் கேட்கப்படும்.