சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு விடுத்துள்ள அறிக்கையில் தருமபுரி- கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கிடைக்கும்நிலத்தடி நீரில் புளோரைடு அளவுக்கு மீறி அடர்த்தியாக இருப்பதால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்துமாறு நீண்ட காலம் போராடினார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தருமபுரி- கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் பொருட்டு அப்போதைய முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அடிக்கல் நாட்டிட, அப்போது துணைமுதலமைச்சராக இருந்து உள்ளாட்சித்துறைக்கு பொறுப்பு வகித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடி மேற்பார்வையில் ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.