விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே காரில் சென்ற கல்லூரி மாணவரை வழிமறித்த கும்பல் கூகுள் பே மூலம் பணம் வழிப்பறி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் கோண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரின்ஸ். இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் ஏரோநாட்டிக்கல் 3ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இவர் கடலூரில் இருந்து சென்னைக்கு காரில் சென்று கொண்டிருந்தார். செல்லும் வழியில் மரக்காணம் அடுத்த அனுமந்தை சுங்கச்சாவடி அருகே மற்றொரு காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் பிரின்ஸ் சென்ற காரை வழிமறித்துள்ளனர். பிரின்ஸ் சென்ற காரில் மேலும் 3 பேர் ஏறிக்கொண்டு மரக்காணம் நோக்கி சென்றுள்ளனர். காரில் இருந்து இறங்கிய கும்பலில் 3 பேர் பிரின்ஸை மிரட்டிய காருடன் கடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.