தமிழகம் வரையாடு இனப்பெருக்க காலம் தொடங்குவதால் இரவிகுளம் தேசியப் பூங்கா 31ல் மூடல் Jan 25, 2022 ஐராவிகுளம் தேசியப் பூங்கா 31 மூணாறு : வரையாடு இனப்பெருக்க காலம் தொடங்குவதையொட்டி, கேரள மாரிலம் மூணாறில் உள்ள இரவிகுளம் தேசியப் பூங்கா வரும் 31ம் தேதி மூடப்படுகிறது. கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு தென்னகத்து காஷ்மீர் என அழைக்கப்படுகிறது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இரவிகுளம் தேசியப் பூங்காவிற்கு செல்வர். இப்பகுதியில் வரையாடுகள் அதிகமாக இருக்கும். இந்நிலையில், வரையாடுகளின் இனப்பெருக்க காலம் தொடங்க உள்ளது. பூங்காவின் வனப்பகுதியில் கடந்த தினம் 3 வரையாடு குட்டிகள் பிறந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர். கொரோனா பரவலை தடுக்கும் வகையில், கடந்த 2 ஆண்டுகளாக மூடப்பட்ட பூங்கா, கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதையடுத்து, மீண்டும் திறக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் மூணாறு மற்றும் தேசியப் பூங்காவில் குவிந்தனர். இந்நிலையில், வரையாடுகளின் இனப்பெருக்க காலம் நெருங்கி வருவதால், பூங்கா மீண்டும் மூடப்படுகிறது. வரையாடுகளின் இனப்பெருக்கம் மற்றும் பாதுகாப்பு காரணமாக தலைமை வனஉயிரின காப்பாளரின் அறிவுறுத்தலின்பேரில், பூங்காவை மூட முடிவு செய்துள்ளதாக, ரேஞ்ச் அதிகாரி ஜோப் நரியம்பரம்பில் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு 142 வரையாடு குட்டிகள் பிறந்தன. இம்முறை கடந்த ஆண்டை விட அதிகமான வரையாடு குட்டிகள் பிறக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மூன்று மாதம் பூங்கா மூடப்படுவதால், சுற்றுலாப் பயணிகள் இயற்கையின் அழகை ரசித்து, வரையாடுகளை காண முடியாது.
முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து 50க்கும் மேற்பட்ட அமைப்பினர், சங்கங்கள் திமுகவுக்கு ஆதரவு: இந்தியா கூட்டணி வெற்றிக்கு பாடுபடுவதாக உறுதி
ஆழ்வார்பேட்டையில் பயங்கரம்; மதுபான பார் மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: திருநங்கையும் உயிரிழந்த பரிதாபம்
புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு முடித்து வைத்ததை எதிர்த்து அதிமுக மனுக்கள் தேவையற்றது: ஐகோர்ட் தீர்ப்பு
துணை கலெக்டர், டிஎஸ்பி பதவி குரூப் 1 இறுதி தேர்வு முடிவு வெளியீடு: அதிக இடங்களை கைப்பற்றி மாணவிகள் சாதனை
அதிமுக ஆட்சியில் போலி அனுமதி எண் வைத்து தணிக்கையில் முறைகேடு செய்த மாவட்ட பதிவாளர் சஸ்பெண்ட்: பதிவுத்துறை ஐஜி ஆலிவர் பொன்ராஜ் அதிரடி
நாடாளுமன்ற தேர்தலில் அசம்பாவிதங்களை தடுக்க 21 ஆயிரம் ரவுடிகள் மீது போலீஸ் தீவிர கண்காணிப்பு: ‘பறவை’ செயலி மூலமும் விசாரணை
பறக்கும் படை கெடுபிடியால் மக்கள் பாதிப்பு; தேர்தல் நாளான ஏப்.19 வரை கடையடைப்பு போராட்டம்: விக்கிரமராஜா எச்சரிக்கை
“வீழட்டும் பாசிசம், வெல்லட்டும் ஜனநாயகம்” ஒன்றியத்தில் மலரட்டும் திராவிட மாடல் ஆட்சி என்ற புத்தகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்; தமிழகத்தில் அடுத்தடுத்து ராகுல் பிரசாரம்: 4 இடத்தில் பேசுவதற்கு ஏற்பாடு
துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட குரூப் 1 பதவியில் 90 காலி பணியிடங்கள்: ஜூலை 13ல் முதல்நிலை தேர்வு
பங்குனி திருவிழாவை முன்னிட்டு சுப்பிரமணியசுவாமி-தெய்வானை திருக்கல்யாணம் கோலாகலம்: திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் பரவசம்
இரு சக்கர வாகனத்தில் சென்றபோது தவறவிட்ட 15-சவரன் தங்க நகைகளை காவல் நிலையில் ஒப்படைத்த தொழுநோய் மருத்துவமனை ஊழியர்கள்