டெல்லி: பிப்ரவரி 1-ம் தேதி காலை 11 மணிக்கு ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவலை தடுக்க மக்களவை, மாநிலங்களவை செயல்படும் நேரங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இரு அவைகளின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டாலும் வழக்கம்போல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.