இமாச்சல பிரதேசம்: வட மாநிலங்களில் தொடர்ந்து கடும் குளிர் நீடிப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர், இமாச்சல பிரதேசம், அருணாச்சல பிரதேசம் என இமயமலையை ஒட்டிய பகுதிகளில் பனி மழை கொட்டுவதால் எங்கு பார்த்தாலும் வெண்போர்வை போர்த்தியது போல காட்சியளிக்கிறது. வீடுகள், மரங்கள், வாகனங்கள் என அனைத்து பகுதிகளிலும் பனி சூழ்ந்திருப்பது காண்பதற்கு ரம்மியமாக இருக்கிறது.